இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அம்பேத்ரும், மோடியும் என்ற புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் சிந்தனைகளை மோடி நடைமுறைபடுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு தனது தம்பி மூலம் பதிலளித்த இளையராஜா நான் மெட்டு போட்டுவிட்டால் அதை மாற்றி திரும்ப போட மாட்டேன். அதேபோல எனது கருத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்ற அறிவித்தார்.
இந்த நிலையில் இளையராஜா, சமூகவலைதளத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடித்திருந்த 'தளபதி' படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலில் இடம் பெற்றிருந்த 'நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என்று பாடு' என்ற வரிகளை இளையராஜா பாடியிருந்தார்.
சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு 'நான் உனை நீங்க மாட்டேன்' என்று அவர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு பாடி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.