இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன . இப்படத்தின் இரண்டாம் பாகம் 1,100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது மூன்றாம் பக்கத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தின் பணிகளை தொடங்க உள்ளார். இருப்பினும் இதில் நடிக்க ஹாலிவுட் நடிகர்கள் சிலரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ராஜமவுலியின் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.