பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமா பிரபலங்கள் பலர் அதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர், நடிகர், இயக்குனர் மாதவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். பாலிவுட் நடிகைகள், தென்னிந்திய நடிகைகள் சிலரும் கேன்ஸில் தான் உள்ளனர்.
கேன்ஸில் ரஹ்மானுடன் இரவு நேர டின்னர் நடந்துள்ளது. அதில் சேகர் கபூர், மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து தமன்னா, “இதைவிட ஒரு இரவு எப்படி இன்னும் அற்புதமாக இருக்கம்,” என தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் செல்பி எடுத்துக் கொண்ட பூஜா ஹெக்டே 'த லெஜன்ட்' எனக் குறிப்பிட்டுள்ளார்.