பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின முயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் படம் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ஆடியன்ஸ் அதிகம். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தன. டான் படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான ஒரு போட்டோவை பகிர்ந்து சிவகார்த்திகேயன் கூறியதாவது : ‛‛இந்திய சினிமாவின் ‛டான்' சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். 60 நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களின் பொன்னான நேரத்திற்கும், டான் படத்திற்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்திற்கும் நன்றி தலைவா'' என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.