முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்த படம் 'கேஜிஎப் 2'. ஏப்ரல் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.
அடுத்தடுத்து பல வசூல் சாதனைகளைப் புரிந்து தற்போது 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இந்தியாவில் 400 சென்டர்களிலும், வெளிநாடுகளில் 10 சென்டர்களிலும் இப்படம் 50வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 1300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது 'கேஜிஎப் 2'. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 130 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல். ஹிந்தியில் 500 கோடி வசூலையும் கடந்திருக்கிறது. இரண்டு மொழிகளிலும் பல நேரடிப் படங்களின் வசூலை மிஞ்சியுள்ளது இந்த கன்னட மொழி மாற்றுப் படம்.
படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகன்டூர், “புதிய சகாப்தத்தின் மான்ஸ்டர் என்டர்டெயின்மென்ட்டை எங்களுடன் சேர்த்து எழுதி, தைத்ததற்கு நன்றி. உங்களது கட்டுப்பாடில்லாத அன்பாலும், அசைக்க முடியாத ஆதரவாலும்தான் இது நடந்தது. இன்னும் கர்ஜித்துக் கொண்டே இந்த மான்ஸ்டரைக் கொண்டாடுவோம். தோற்றகடிக்க முடியாத 50வது நாளில்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.