பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடித்த படம் 'கேஜிஎப் 2'. ஏப்ரல் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.
அடுத்தடுத்து பல வசூல் சாதனைகளைப் புரிந்து தற்போது 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இந்தியாவில் 400 சென்டர்களிலும், வெளிநாடுகளில் 10 சென்டர்களிலும் இப்படம் 50வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 1300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது 'கேஜிஎப் 2'. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 130 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல். ஹிந்தியில் 500 கோடி வசூலையும் கடந்திருக்கிறது. இரண்டு மொழிகளிலும் பல நேரடிப் படங்களின் வசூலை மிஞ்சியுள்ளது இந்த கன்னட மொழி மாற்றுப் படம்.
படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகன்டூர், “புதிய சகாப்தத்தின் மான்ஸ்டர் என்டர்டெயின்மென்ட்டை எங்களுடன் சேர்த்து எழுதி, தைத்ததற்கு நன்றி. உங்களது கட்டுப்பாடில்லாத அன்பாலும், அசைக்க முடியாத ஆதரவாலும்தான் இது நடந்தது. இன்னும் கர்ஜித்துக் கொண்டே இந்த மான்ஸ்டரைக் கொண்டாடுவோம். தோற்றகடிக்க முடியாத 50வது நாளில்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.