பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

திருப்பதி : திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. அங்கு கோயில் வளாகத்தில் அவர்கள் போட்டோஷூட் நடத்திய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாய் சுற்றி வந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று திருமணம் செய்து கொ்டனர். மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருமணத்திற்கு பிறகான போட்டோஷூட்டை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி நடத்தி உள்ளனர். விதிமீறி இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் நான்கு மாட வீதியில் செருப்பு அணியக்கூடாது என கோவில் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டது. ஆனால் அதை மீறி நயன்தாரா காலில் செருப்பு அணிந்தபடி இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் சர்ச்சையாகி உள்ளது.