பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணி இணைந்த 'ஆர்ஆர்ஆர்' படம் பெரும் வெற்றி பெற்று 1000 கோடி வசூலைப் பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் இந்தப் படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வந்த படங்களில், தங்களது ஓடிடி தளத்தில் 45 மில்லியன் மணி நேரப் பார்வைகளை இந்தப் படம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி தளம் என இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்து ஒரு படத்தை உருவாக்க பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலியிடமும், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஆர்ஆர்ஆர்' படம் போன்றே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
எல்லாம் கூடி வந்தால் ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணி இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் இந்த 'ஆர்ஆர்ஆர்' கூட்டணியின் அடுத்த படம் உருவாகலாம் என்கிறார்கள்.