பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இந்தியத் திரையுலகத்தில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து, பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்கள், படங்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. கடந்த சில வருடங்களாக குறைவான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவரது இசையில் ஒரு காலத்தில் ஒரே நாளில் பல படங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. அவரைப் போல இனி, தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவில் இசையமைக்க யாராவது வருவார்களா என்பது சந்தேகம் தான்.
கடந்த வாரம் ஜுன் 24ம் தேதி ஒரே நாளில் இளையராஜாவின் இசையில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு படம் 'மாயோன்', மற்றொன்று 'மாமனிதன்'. இதில் 'மாமனிதன்' படத்தில் தனது மகன் யுவன்ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ளார்.
இளையராஜா இசையில் கடைசியாக 2016ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி 'அப்பா, ஒரு மெல்லிய கோடு' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளன. அதற்கடுத்து ஆறு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம்தான் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன.
இளையராஜா தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.