இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளர் இயக்குனராக இருப்பவர் கரண் ஜோஹர். இதைத்தாண்டி இவரது காபி வித் கரண் என்கிற ரியாலிட்டி ஷோ ரொம்பவே பாப்புலர். பாலிவுட்டில் மட்டுமல்லாது ஹிந்தியில் தங்களது திரைப்படத்தை வெளியிடும் தென்னிந்திய படக்குழுவினர் கூட இவரது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது படத்தை புரமோஷன் செய்வது வழக்கம்.
அந்தவகையில் தற்போது காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி ஓடிடி வழியாக துவங்கியுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார் என்பது சமீபத்தில் வெளியான ப்ரோமோ மூலம் வெளிப்பட்டுள்ளது.
கரண் ஜோஹரை பொருத்தவரை அனைத்து பிரபலங்களிடமும் கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களது திரை வாழ்க்கை, பர்சனல் வாழ்க்கை என வெளிபடையாக கேள்விகளை கேட்கக் கூடியவர். இப்படி இவர்கள் உரையாடும்போது சமந்தா, கரண் ஜோஹரிடம், “பல பேரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததற்கு காரணம் நீங்கள் தான்.. ஏனென்றால் நீங்கள் வாழ்க்கை 'கபி குஷி கபி கம்' அதாவது கே3ஜி போல என்று சொல்கிறீர்கள். ஆனால் நிஜத்தில் வாழ்க்கை கேஜிஎப் போலத்தான் இருக்கிறது” என்று ஜாலியாக கூறுவது போன்று அந்த புரோமோ வெளியாகி உள்ளது. இந்த எபிசோட் வரும் ஜூலை 7ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது..