தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரையுலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருவது போல நடிகைகள் பெரிய அளவில் பட தயாரிப்பில் ஈடுபடுவது இல்லை. ஒரு சிலர் மட்டுமே ஒரு பக்கம் பிசியாக நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை டாப்சியும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.
சமந்தாவைப் பொறுத்தவரை பாலிவுட்டுக்குள் அடி எடுத்து வைத்தாலும் வெப்சீரீஸ் பக்கமே தற்போது அவரது கவனம் இருக்கிறது. ஏற்கனவே பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதே ராஜ் மற்றும் டிகே. இரட்டை இயக்குனர்களின் மற்றொரு வெப்சீரிஸில் தற்போது நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.