ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சமீபத்தில் எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார்கள். இந்த நிலையில் விஷால், கார்த்தி இருவருக்கும் துணை நடிகர் ராஜதுரை என்பர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளனர். நடிகர் சங்க வளர்ச்சி பணியில் 3 நிர்வாகிகளும் இரவு பகலுமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரான நடிகர் ராஜதுரை சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக வாட்ஸ்அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. எனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ்அப் குரல் பதிவை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.