டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் |

நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்தார். அதற்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக இரண்டு சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும். ஆனால் விஜய் வாங்கிய காருக்கு 40% கணக்கிட்டு இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த அபராதத்தை ரத்து செய்ய கோரி விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சுரேஷ் குமார் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் வணிக வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து நடந்து வந்த விஜய்யின் வெளிநாட்டு கார் மீதான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.