இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து, படையப்பா என்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதையடுத்து அவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த ராணா படம் தொடங்கப்பட்டபோது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அவர்கள் லிங்கா படத்தில் இணைந்தார்கள். இந்த படமும் முதல் இரண்டு படங்களை போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் அதிர்ச்சி தோல்வி கொடுத்தது. அதையடுத்து அவர்கள் இணையவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், லிங்கா படம் தோல்வி அடைவதற்கு ரஜினி, தயாரிப்பு நிறுவனம் எடுத்த சில முடிவுகளும் காரணம் என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அது குறித்து அவர் கூறுகையில், லிங்கா படத்திற்கு முதலில் கிளைமேக்ஸை வேறு விதமாகதான் வைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சில காட்சிகளை பார்த்த ரஜினி அதில் மாற்றம் செய்ய சொன்னார். முதலில் இந்த படத்தில் பலூன் காட்சிகள் எல்லாம் இடம் பெறவில்லை. ரஜினி சொன்னதால் அந்த காட்சிகளை படமாக்கினோம். அதுமட்டுமின்றி படத்தை திட்டமிட்டபடி முடித்து தர வேண்டும் என்று தயாரிப்பு துறை இன்னொரு பக்கம் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்திருந்த கிளைமேக்ஸை படமாக்காமல் படத்தை முடித்தோம் என்று கூறியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.