ஆகஸ்ட் 21ல் ‛ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியீடு | 35 ஆண்டுகளுக்குபின் பூர்ணிமாவுடன் இணைந்து கே.பாக்யராஜ் நடித்த படம் எது தெரியுமா | நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற பூஜா ஹெக்டே | கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஹிந்தி படத்தில் நடிக்கும் பார்வதி | 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய் காயம் | மோகன்லால் படத்தில் நடிக்கிறாரா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்? | அமீர்கான் தயாரிப்பில் உருவான 'பட்வாரா 1947' பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்திக்கிறது! | மம்முட்டியின் உதவியால் கேட்கும் திறனை பெற்ற இரண்டு சிறுவர்கள் | சிரஞ்சீவி பிறந்தநாளில் 158வது படத்தலைப்பு: பிரத்யேகக் காட்சிகளுடன் தியேட்டரில் வெளியாகிறது! | யஷின் 'டாக்சிக்' ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எப்போது? |

ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து, படையப்பா என்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதையடுத்து அவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த ராணா படம் தொடங்கப்பட்டபோது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அவர்கள் லிங்கா படத்தில் இணைந்தார்கள். இந்த படமும் முதல் இரண்டு படங்களை போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் அதிர்ச்சி தோல்வி கொடுத்தது. அதையடுத்து அவர்கள் இணையவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், லிங்கா படம் தோல்வி அடைவதற்கு ரஜினி, தயாரிப்பு நிறுவனம் எடுத்த சில முடிவுகளும் காரணம் என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அது குறித்து அவர் கூறுகையில், லிங்கா படத்திற்கு முதலில் கிளைமேக்ஸை வேறு விதமாகதான் வைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சில காட்சிகளை பார்த்த ரஜினி அதில் மாற்றம் செய்ய சொன்னார். முதலில் இந்த படத்தில் பலூன் காட்சிகள் எல்லாம் இடம் பெறவில்லை. ரஜினி சொன்னதால் அந்த காட்சிகளை படமாக்கினோம். அதுமட்டுமின்றி படத்தை திட்டமிட்டபடி முடித்து தர வேண்டும் என்று தயாரிப்பு துறை இன்னொரு பக்கம் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்திருந்த கிளைமேக்ஸை படமாக்காமல் படத்தை முடித்தோம் என்று கூறியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.




