தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
1940களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்கு பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு. இந்த வழக்கில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சிறை தண்டனை பெற்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. பல நூல்களும் வெளிவந்துள்ளது. தற்போது இது வெப் தொடராக தயாராகிறது.
இதனை சோனி லிவ் தளம் வெளியிடுகிறது. தி மெட்ராஸ் மர்டர் என்ற இந்த வெப் சீரிஸை சூரியபிரதாப் எழுதி இயக்குகிறார். இயக்குநர் விஜய் இந்தத் தொடரின் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இதுபற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைத் தொடர் உருவாகிறது. சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறான கட்டுரைகளை எழுதியதற்காக கொல்லப்பட்ட பிரபல பத்திரிகையாளரின் கொலையைச் சுற்றி கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரின் தொடர்புகள் குறித்து அறியப்படாத சதிகளையும் மர்மங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்து ஏ.எல்.விஜய் கூறியிருப்பதாவது: மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மிகவும் சவாலான தி மெட்ராஸ் மர்டர் தொடரில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்க, எங்கள் முழு மூச்சுடன் உழைக்கும்.
அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் முழு அர்ப்பணிப்புடன் நடந்து வருகிறது. டிஜிட்டல் திரையில் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தை காண காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.