பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ராம்யா கிருஷ்ணன் உலக குத்துச் சண்டை சேம்பியன் மைக் டைசன் நடித்துள்ள படம் லைகர். இந்த படத்தை புரி ஜெகன்னாத் இயக்கியுள்ளார். நடிகை சார்மி, கரண் ஜோஹர் தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 25ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் விஜய்தேவர கொண்டா சிரஞ்சீவி மற்றும் சல்மான்கானை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விஜய்தேவர கொண்டா மற்றும் இயக்குனர் புரி ஜெகன்னாத், தயாரிப்பாளர் சார்மி வந்து சிரஞ்சீயிடமும், சல்மான்கானிடமும் ஆசி பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது: தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் வட இந்திய சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் ஒரே படத்தில் நடிப்பது என்னை போன்ற அவர்களது ரசிகர்களுக்கு பெரிய விருந்து. அவர்கள் சேர்ந்து நடிக்கும் அபூர்வ காட்சியை பார்த்துவிட்டு, அவர்களிடம் என் படத்தின் வெற்றிக்கு ஆசிர்வாதம் பெற்றது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. என்கிறார் விஜய் தேவரகொண்டா.