பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தனது கனவு படம் என துல்கர் சல்மான் ஏற்கனவே குறிப்பிட்ட 'கிங் ஆப் கோத' என்கிற படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவரது தந்தை ஜோஷி துல்கர் சல்மானின் தந்தையான மம்முட்டியை வைத்து கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் என ஒன்று கூட அதில் இல்லை. அதையடுத்து இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தனர். அந்தவகையில் 'கிங் ஆப் கோத' படத்தில் சமந்தா நடிக்கும் பட்சத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இது அமையும் என்று சொல்லலாம்.