'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

'பாகுபலி' வில்லனான ராணா டகுபட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தையும் திடீரென 'டெலிட்' செய்துள்ளார். அவரது இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 4.7 மில்லியன் பாலோயர்கள் ராணாவுக்கு உள்ளார்கள்.
தெலுங்கில் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'விராட பர்வம்' படம் சுமாராகத்தான் ஓடியது. அப்படத்தின் பிரமோஷனுக்குப் பிறகு அவர் மீடியா பக்கம் வருவதில்லை.
இந்நிலையில் ராணா டகுபட்டி தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை மனைவி மிஹீகாவுடன் கொண்டாடியுள்ளார். தற்போது இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தங்களது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை மட்டும் ராணாவின் மனைவி மிஹீகா பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் ராணாவையும் 'டேக்' செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாவில் அனைத்துப் பதிவுகளையும் டெலிட் செய்துள்ள ராணா தனது திருமண நாள் கொண்டாட்டப் புகைப்படங்களைக் கூட அவரது கணக்கில் பதிவிடவில்லை. 'விராட பர்வம்' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்க ராணா இன்னும் சம்மதிக்கவில்லை.