பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.
விஜய் 67 வது படத்தை ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் கதையில் இயக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் திரைக்கதையில் பல புதுமைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். முக்கியமாக இந்த படத்தில் ஆறு வில்லன்கள் நடிக்கயிருக்கிறார்கள். சஞ்சய்தத், அர்ஜுன், பிரிதிவிராஜ், கவுதம் மேனன் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு அதிரடி வில்லன்களை தேடி வருகிறார்.
மேலும், இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தைப் போலவே பாடல்களே இல்லாத படமாக உருவாகிறது. ஆக்ஷன் திரைக்கதை என்பதால் பாடல் காட்சி இருந்தால் கதை ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இப்படத்தை விஜய் படங்களில் புதுமையானதாகவும், முழுக்க முழுக்க தனது பாணி படமாக இயக்குவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.