சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே 'பராசக்தி' தலைப்புக்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக் : தமிழில் முதல் வண்ண படம் | 'கூலி, வார் 2' டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்கு திரையுலகினர், ரசிகர்கள் எதிர்ப்பு | மோனிகா பெலூசி ரசித்த 'கூலி மோனிகா' பாடல் |
சென்னை-28, சத்தம் போடாதே, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் நிதின் சத்யா. இவர் கடந்த ஞாயிறு இரவு தான் மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார். சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென எதிர்பாராத விதமாக மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நெரிசலில் நடிகர் நிதின் சத்யாவும் தனது காரில் பயணித்த போது ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டருகே உள்ள சிக்னலில் மாட்டிக்கொண்டார்.
அந்த சமயத்தில் நிதின் சத்யாவுக்கு சற்று அருகிலிருந்த மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்தது. அதேசமயம் நிதின் சத்யா அந்த விபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள நிதின் சத்யா மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக மழை நேரத்தில் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு செய்தியையும் அவர் அதில் கொடுத்துள்ளார்.