பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழில் 'நடிகையர் திலகம்' என டப்பிங் ஆகி வெளிவந்த 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தற்போது பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க 'பிராஜக்ட் கே' என்ற படத்தை இயக்கிய வருகிறார். பிரம்மாண்டமான பொருட் செலவில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
தீபிகா படுகேனே கதாநாயகியாக நடிக்க, அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளுக்கும் பிரபலமான நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள்.

தென்னிந்திய மொழிகளுக்காக மேலும் சில நடிகர்களை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ்த் திரையுலகத்திலிருந்து சூர்யா, மலையாளத்திலிருந்து துல்கர் சல்மான், மேலும் தெலுங்கு ஸ்டார் ஆன மகேஷ் பாபு ஆகியோரும் நடிக்கப் போகிறார்கள் என சொல்லி வருகிறார்கள். இது உண்மையா, வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.