பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு சிறந்த நடிகர், நடிகை, இசை என 5 தேசிய விருதுகளை அறிவித்தது. இதற்கான விழா டில்லியில் இன்று(செப்., 30) நடக்கிறது. இதற்காக ஜிவி பிரகாஷ் டில்லி சென்றுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ் : ‛‛கொரோனா காலக்கட்டத்தில் மொத்த படக்குழுவும் கஷ்டப்பட்டு எடுத்த ஒரு படம் சூரரைப்போற்று. இந்த படத்திற்கு நிறைய விருது கிடைத்தது மகிழ்ச்சி. இது எனது முதல் தேசிய விருது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. இயக்குனர் சுதா, சூர்யா உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி. நல்ல படம் எந்த மொழியாக இருந்தாலும் அங்கீகரிக்கப்படுவது சந்தோஷம். வரவேற்கனும். அடுத்து ஹிந்தி சூரரைப்போற்று படத்திற்கு இசையமைக்கிறேன். கங்கனாவின் எமெர்ஜென்சி, வாடிவாசல் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறேன். பாரதிராஜா உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதுதவிர நிறைய படம் போய் கொண்டு இருக்கிறது.