ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு சிறந்த நடிகர், நடிகை, இசை என 5 தேசிய விருதுகளை அறிவித்தது. இதற்கான விழா டில்லியில் இன்று(செப்., 30) நடக்கிறது. இதற்காக ஜிவி பிரகாஷ் டில்லி சென்றுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ் : ‛‛கொரோனா காலக்கட்டத்தில் மொத்த படக்குழுவும் கஷ்டப்பட்டு எடுத்த ஒரு படம் சூரரைப்போற்று. இந்த படத்திற்கு நிறைய விருது கிடைத்தது மகிழ்ச்சி. இது எனது முதல் தேசிய விருது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. இயக்குனர் சுதா, சூர்யா உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி. நல்ல படம் எந்த மொழியாக இருந்தாலும் அங்கீகரிக்கப்படுவது சந்தோஷம். வரவேற்கனும். அடுத்து ஹிந்தி சூரரைப்போற்று படத்திற்கு இசையமைக்கிறேன். கங்கனாவின் எமெர்ஜென்சி, வாடிவாசல் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறேன். பாரதிராஜா உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதுதவிர நிறைய படம் போய் கொண்டு இருக்கிறது.