பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது வெளிநாடுகளிலும் கூட இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் அப்டேட் செய்துள்ளார்கள்.
அமெரிக்கா, அரேபிய நாடுகள், இங்கிலாந்து, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா என தமிழர்கள் அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் இப்படத்தின் வசூல் இதற்கு முன்பு வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், அடுத்ததாக அரேபிய நாடுகளில் ரூ.19 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளிநாடுகளிலும் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த வார இறுதி நாட்களிலும் வெளிநாடுகளில் இப்படம் இன்னும் வசூலைக் குவிக்கும் என்கிறார்கள்.