இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் |
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரஜினி அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து தகவல்களும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு செய்தியும், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாகவும் இரண்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் ஜெயிலர் படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இரண்டு படங்களில் ரஜினியின் 170 வது படத்தை சிபி சக்ரவர்த்தியும், 171-வது படத்தை தேசிங்கு பெரிய சாமியும் இயக்குவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்களை லைகா நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.