விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛பொன்னியின் செல்வன்' படத்தில் அவர் ஏற்று நடித்த குந்தவை வேடம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது. தமிழ் சினிமாவில் இப்போதும் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதை நெருங்கி விட்டார். ஆனால் திருமணம் செய்யவில்லை.
இதுபற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ஏதோ கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நான் நபரை சந்திக்க வேண்டும். அப்படி ஒருவரை சந்தித்தால் திருமணம் செய்வேன்'' என்கிறார் திரிஷா.
சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் உடதன் திரிஷாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் திருமணம் செய்யும் முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் படங்களில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்.