தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை : வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக, நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நேரில் விசாரிக்க, அரசு அமைத்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், சென்னையில் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்களே ஆகும் நிலையில், 'நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம்' என, சமூக வலைதள பதிவில், விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
வாடகை தாய் வாயிலாக, நயன்தாரா குழந்தை பெற்றது தெரிய வந்தது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. விசாரணை நடத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, 2021 டிசம்பரிலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தால், மருத்துவமனை நிர்வாகம், அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வாடகை தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.