இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்ட நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த நிகழ்வு மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் உட்பட பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இவர்கள் அதை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மருத்துவக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுஒருபுறம் இருக்க இந்த தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததாகவும், டிசம்பரிலேயே குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைகள் எல்லாம் ஒருபுறம் சென்று கொண்டிருக்க குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த தம்பதியர். அதிலும் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயங்களை வீடியோவாக போஸ்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் தனது மகன் தன் மீது சிறுநீர் கழித்துள்ள அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர், தனது கனவு நனவாகி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.