விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் |

சின்னத்திரையில் ஆங்கர், நடிகர் என கலக்கி வந்தவர் ரியோ ராஜ். 'சரவணன் மீனாட்சி' தொடரில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளை பெறவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதன்பலனாக 2017ம் ஆண்டில் 'சத்ரியன்' படத்தின் மூலம் முதல்முறையாக சினிமாவிலும் என்ட்ரியானார். இதனை தொடர்ந்து 2 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ரியோ ராஜூக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' திரைப்படம் மட்டுமே சுமாரான ஹிட் படமாக அமைந்தது. தற்போது ரியோ ராஜ் புதிய படமொன்றில் மீண்டும் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக தலைமுடியை நீளமாக வளர்த்து கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக கன்னட நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் பிரபல தமிழ் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு கிளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார்.