இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சின்னத்திரையில் ஆங்கர், நடிகர் என கலக்கி வந்தவர் ரியோ ராஜ். 'சரவணன் மீனாட்சி' தொடரில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளை பெறவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதன்பலனாக 2017ம் ஆண்டில் 'சத்ரியன்' படத்தின் மூலம் முதல்முறையாக சினிமாவிலும் என்ட்ரியானார். இதனை தொடர்ந்து 2 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ரியோ ராஜூக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' திரைப்படம் மட்டுமே சுமாரான ஹிட் படமாக அமைந்தது. தற்போது ரியோ ராஜ் புதிய படமொன்றில் மீண்டும் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக தலைமுடியை நீளமாக வளர்த்து கெட்டப் சேஞ்ச் செய்துள்ளார். படத்தில் ரியோவுக்கு ஜோடியாக கன்னட நடிகை பவ்யா த்ரிகா நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் பிரபல தமிழ் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு கிளாப் போர்டு அடித்து ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார்.