பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2014ம் ஆண்டு வெளியான அப்புச்சி கிராமம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் வி.ஐ.ஆனந்த். அதன்பிறகு தமிழில் படம் இயக்கவில்லை. தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு சந்தீப் கிஷன் நடித்த டைகர், நிகில் சித்தார்த்தா நடித்த எக்கடிக்கு போதாவு சின்னவாடா, அல்லு சிரிஷ் நடித்த ஒக்க ஷணம், ரவிதேஜா நடித்த டிஸ்கோ ராஜா படங்களை இயக்கினார்.
தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் 'ஊரு பேரு பைரவகோனா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில காவ்யா தாப்பர், வர்ஷா பொல்லம்மா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ், ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. சூப்பர் நேச்சுரல் பேன்டஸி படமாக பெரிய பட்ஜெட்டில் இது உருவாகிறது. தெலுங்குடன் சேர்த்து தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஆனந்த்.