தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வரும் சனிக்கிழமை (நவ.,26) மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி மெயின் ஹாலில் ‛ஸ்ரீ ஆண்டாள்' என்னும் நடன நாடக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் தயாரிப்பு மற்றும் இசையில், ஆண்டாள் வரதராஜன் எழுதிய பாடலை இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி, நிவாஸ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இவர்களுடன் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து பாடியுள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், ‛ஆண்டாளின் கதையை அழகாக நடனத்தின் மூலம் வெளிப்படுத்த ஆசைப்பட்டோம். ரொம்ப நல்லா வந்திருக்கு' மக்கள் அனைவரும் வந்து இந்த நாட்டிய நாடகத்தை பார்த்து மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்