பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ், மலையாள சினிமாக்களில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் சீனியர் நடிகை ரேவதி சமீபகாலமாக இந்த இரண்டு மொழிகளிலும் அதிக படங்களில் நடிக்கவில்லை.. காரணம் அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வந்தார். கஜோல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட இளம் செஸ் விளையாட்டு வீரன் ஒருவனை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ரேவதி.
அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் இந்த கதையை சொன்னதற்காக ரேவதிக்கு பாலிவுட்டில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவியும் ரேவதிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது, “பெண் இயக்குனர்களுக்கு மட்டுமல்ல.. ஆண் இயக்குனர்களுக்கும் ரேவதி ஒரு உற்சாக தூண்டுகோலாக இருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.