பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சென்னையைச் சேர்ந்த, 'டேக் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தாக்கல் செய்த மனு: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத் தயாரிப்புக்காக, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம், 5 கோடி ரூபாய் கடனாக, எங்கள் நிறுவனத்திடம் பெற்றது. கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் 6.92 கோடி ரூபாய் தர உத்தரவிடக் கோரி, வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள தியேட்டர்களில், ஹீரோ படத்துக்கு வசூலாகும் தொகையை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டது. பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பு, சிவகார்த்திகேயனுக்கும் உள்ளது. அவரையும் சேர்த்து தான், நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவரை, ஹீரோ படத்தின் வாயிலாக வசூலான தொகையை செலுத்த, சிவகார்த்திகேயன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரின்ஸ் படத்துக்காக, 30 கோடி ரூபாய் சம்பளம், அவருக்கு கிடைக்கிறது. அந்த சம்பளத் தொகையை முடக்கி வைத்தால் தான், எங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும். எனவே, சிவகார்த்திகேயனுக்கு தர வேண்டிய சம்பளத்தை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சரவணன் முன், விசாரணைக்கு வந்தது. பிரின்ஸ் படத்தில் பெற்ற சம்பளத்தை, இவ்வழக்கில் கோரப்பட்ட தொகைக்காக செலுத்த, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உத்தரவிடும்படி, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், 'நடிகர் என்ற முறையில், சம்பளம் பெற்று நடிக்கிறார். தயாரிப்பு பணிகளுக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை; துன்புறுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நடிகரின் சம்பளத்தை செலுத்தக் கோரிய மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.