மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்பு ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த ஆண்டு 'தி ஆர்ட்டிஸ்' என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார்.
இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக 12 செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான வடிவமைத்துள்ளனர். இது குறித்து புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறும்போது “கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த ஆர்டிஸ்ட் சமர்ப்பணம். பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இதற்காக நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் பணம் காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும்” என்கிறார்.