தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து தற்போது ‛பத்து தல' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது. அதோடு பத்து தல படத்திற்குப் பிறகு கொரோனா குமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என இரண்டு படங்களில் அடுத்த படியாக சிம்பு நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனபோதிலும் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அதேசமயம் சிம்பு தற்போது மேலும் சில இயக்குனர்களிடத்திலும் கதை கேட்டுள்ளார். அதனால் அடுத்தபடியாக சிம்பு எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில், தற்போது சிம்பு ஒரு தற்காப்பு கலையின் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக இந்த பயிற்சியில் அவர் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.