பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
முன்னணி நடிகையான குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியிலும் இடம் பெற்று இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்காகத்தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்த அவர், இதற்காக எனது பயணத்தை நிறுத்திக்கொள்ள போவதில்லை என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார் குஷ்பு. அப்போது தான் அமர்ந்து செல்வதற்கு சக்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதோடு அந்த டுவிட்டர் பதிவை ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயருக்கு டேக் செய்து, முழங்காலில் காயம் ஏற்பட்ட பயணிகளை அழைத்துச் செல்ல தேவைப்படும் சக்கர நாற்காலி கூடவா உங்களிடத்தில் இல்லை. இதற்காக நான் அரை மணி நேரம் கால் வலியுடன் காத்திருந்தேன். அதையடுத்து வேறு ஒரு விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலி வாங்கி வந்து என்னை அழைத்து சென்றார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
குஷ்புவின் இந்த பதிவை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குஷ்புவுக்கு பதில் அளித்துள்ளது.