பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம் சிறந்த படமாக பாராட்டப்பட்டதுடன் அதில் நடித்த கதிர், ஆனந்தி, யோகிபாபு மட்டுமல்லாமல், மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் பெயரை பெற்று தந்தது. அந்த வகையில் அந்த படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நெல்லை தங்கராஜ். கூத்து கலைஞரான இவர் இன்று வயது மூப்பு காரணமாக நெல்லையில் காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “ஆங்காரமாய் ஆடியது போதும்.. இளைப்பாருங்கள் அப்பா.. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடு இருக்கும்.. பரியேறும் பெருமாள்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்