பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் துணிவு படத்துக்கு இணையான ஆக்சன் காட்சிகள் இல்லாததால் சில திருத்தங்களை சொல்லி அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார் அஜித்குமார். அதோடு மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு அதிரடி கண்டிஷனும் போட்டு இருக்கிறார்.
அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது 2023ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்கள். அதேப்போன்று தனது 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் அஜித் குமார்.
அதோடு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும். இடையில் எந்தவித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த நிலையில் அஜித் 62 ஆவது படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.