பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சியை இன்று(பிப்., 13) துவக்கி வைத்தார். இதற்காக பெங்களூர் வந்த பிரதமரை கன்னட திரை உலகை சேர்ந்த கேஜிஎப் பட நாயகன் யஷ் , காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிர்கந்தூர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது பிரதமரிடம் திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர். குறிப்பாக வரி தொடர்பான விஷயங்கள், கர்நாடகாவில் திரைப்பட நகரம், வெளிநாடுகளில் இருப்பது போன்று இங்கும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். பிரதமரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.