ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மொழிக்கு ஒருவர் என மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த மாதத்திலேயே ஐதராபாத், ஜெய்சல்மர் என வெவ்வேறு லொக்கேஷன்களில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூரில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் மோகன்லாலுடனும் ஜெய்செல்மரில் ஜாக்கி ஷெராப்புடனும் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏற்கனவே சென்னையில் சிவராஜ்குமார் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது மங்களூருவில் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து நடிக்கும் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து இரவு நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.