23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காசேதான் கடவுளடா. கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இரு முறை ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டும் இன்னும் இப்படம் வெளியாகவில்லை.
இந்த படத்தை தயாரிக்க ராஜ்மோகன் என்பவரிடம் 1.75 கோடி பைனான்ஸ் வாங்கியுள்ளார்கள். ஆனால் வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதனால் பைனான்சியர் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், மனுதாரருக்கு தரவேண்டிய மீதித் தொகையை திருப்பித் தரும் வரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்கள். இதனால் படம் வெளியாகவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.