பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2009ம் ஆண்டு வெளியான 'குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்' படத்தில் நடித்தவர் தனன்யா. இதில் சேரனின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் கதை நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு தனன்யா 'வெயிலோடு விளையாடு' என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
டாக்டராக படித்துக் கொண்டிருந்த தனன்யா படிப்பை தொடர சென்று விட்டார். படித்து முடித்து டாக்டராகிவிட்ட தனன்யா அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் தற்போது தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தி உள்ளார். கணவரின் அனுமதியோடு மீண்டும் தனன்யா நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயின் என்று இல்லாமல் மற்ற கேரக்டர்களில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.