பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'பத்து தல' படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அப்படத்தை தயாரிக்க உள்ளது. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இன்றைய அறிவிப்பு பற்றி நேற்றே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் படத் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அவர்களது 6வது தயாரிப்பு பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்கள். இது சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படமா அல்லது தயாரிக்கும் படமா என்பது அறிவிப்பு வரும் போது தெரியும்.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படம் ஆரம்பிப்பதற்குள் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவாரா என்பது சந்தேகம்தான்.