புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
2023 - 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வருகிற மார்ச் 26ம் தேதி நடக்க இருக்கிறது. இதனை இரண்டு முன்னாள் நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து நடத்த இருக்கிறார்கள். இதில் தற்போது பொறுப்பில் இருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகிறார்கள். தற்போது இந்த அணியில் இருந்து விலகிய சிலர் தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் 'உரிமை காக்கும் அணி' என்ற பெயரில் புதிய அணி ஒன்றை தொடங்கி உள்ளனர்.
இதில் மன்னனுடன், கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், கே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். 300 தயாரிப்பாளர்களுக்கு மேல் இந்த அணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அணியின் ஆலோசனை கூட்டம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. விரைவில் யார் யார் எந்தெந்த பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.