தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஊடகங்களில் பிரபலமான வீஜே பார்வதிக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம். ராவான ரவுடி பேபியாக எந்தவொரு விஷயத்திலும் ஓப்பனாக தைரியமாக பேசுவதால் பலருக்கும் இவர் பேவரைட்டாக இருக்கிறார். அடிக்கடி எங்காவது டூர் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோவாகவும், சோஷியல் மீடியா போஸ்ட்டாகவும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் எக்ஸோடிக் பெட்ஸ் என அழைக்கப்படும் மிக அரிதான செல்லபிராணிகள் விற்கும் பண்ணைக்கு வீஜே பாரு அண்மையில் விசிட் அடித்துள்ளார். அங்கே, செல்லபிராணிகளாக வளர்க்கப்படும் அனகோண்டா பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டும் கையில் பிடித்தவாறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சில மிருகங்களை பெண்கள் பார்த்தாலே பயந்து ஓடுவர். ஆனால் பார்வதியோ, அந்த செல்லபிராணிகளுடன் பாசமாக கொஞ்சி விளையாடுகிறார். பாம்புகளுடனும் ஓணான்களுடனும் பயமின்றி விளையாடும் இவரின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.