பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் விமல் தனது மனைவி பிரியதர்ஷினி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் தரிசனம் நீண்ட நாள் கனவு. அதனால் குடும்பத்துடன் வந்தேன். எனது சினிமா கேரியர் சீராக போய்கொண்டிருக்கிறது. மா.பொ.சி படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து முழுநீள காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கு பிடித்தமான கதைகளை தேடி நடிக்கிறேன். விலங்கு வெப் தொடர் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றார்.
விமலுக்கு உள்ள பைனான்ஸ் பிரச்னை, வழக்கு இதுகுறித்த கேள்விகளுக்கு “எல்லாவற்றையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்” என்று பதிலளித்து சென்றார்.