பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. விருது வாங்கிய பின் படக்குழுவினர் ஒவ்வொருவராக இந்தியா திரும்பினர்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காக நடன ஒத்திகை ஒன்று நடைபெற்று வருகிறது.
நடன இயக்குனர்கள் பிரபுதேவா, கணேஷ் ஆகியோர் அதைச் செய்து வருகிறார்கள். அதில் கலந்து கொள்ள வந்த ராம் சரண் முன் பிரபுதேவா, கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி ராம் சரணுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.