நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை திரும்பி உள்ள படக்குழு ஓய்வில் உள்ளனர். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த காட்சியை அவரது குடும்பத்தார், வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ விஜய்யின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நடிகர் விஜய், அச்சிறுமியை போனில் தொடர்பு வீடியோ காலில் பேசினார். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.