ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது |
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛லியோ' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னை திரும்பி உள்ள படக்குழு ஓய்வில் உள்ளனர். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த அபிதா பேகம் என்ற சிறுமி நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த காட்சியை அவரது குடும்பத்தார், வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ விஜய்யின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நடிகர் விஜய், அச்சிறுமியை போனில் தொடர்பு வீடியோ காலில் பேசினார். மேலும் அவரது குடும்பத்தாரிடமும் கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.