பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த மார்ச் 26ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்க உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரியாக தயாரிப்பாளர் சங்கம் நியமித்திருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனுடன் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசனையும் கூடுதல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதி நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் “தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். வாக்குஎண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு குறைகள் இருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதுடன். தேர்தல் முடிந்த உடன் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.