பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலா இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க ஆரம்பமான 'வணங்கான்' படத்தில் தெலுங்கு நடிகையான கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், பாலா, சூர்யா இடையே மோதல் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். கதையிலும் மாற்றம் ஏற்பட்டதால் கிர்த்தியும் நடிக்க முடியாமல் போனது. தற்போது அப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
தமிழில் 'த வாரியர்' படம் மூலம் கடந்த வருடம் அறிமுகமானார் கிர்த்தி. ஆனால், அந்தப் படம் இங்கு ஓடவில்லை. அடுத்து முன்னணி நடிகரான சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கலாம், தமிழிலும் தடம் பதிக்கலாம் என நினைத்திருந்த கிரித்திக்கு அந்த வாய்ப்பும் எதிர்பாராமல் பறிபோனது. இப்போது சூர்யாவின் தம்பி கார்த்தியோடு ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனடியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
நலன் குமாரசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சைலன்ட்டாக ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு கிர்த்தியும் நடித்து வருகிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்திலும் கிர்த்திதான் கதாநாயகி. அடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள 'ஜீனி' படத்திலும் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.