தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
பாலா இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க ஆரம்பமான 'வணங்கான்' படத்தில் தெலுங்கு நடிகையான கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், பாலா, சூர்யா இடையே மோதல் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து சூர்யா விலகினார். கதையிலும் மாற்றம் ஏற்பட்டதால் கிர்த்தியும் நடிக்க முடியாமல் போனது. தற்போது அப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
தமிழில் 'த வாரியர்' படம் மூலம் கடந்த வருடம் அறிமுகமானார் கிர்த்தி. ஆனால், அந்தப் படம் இங்கு ஓடவில்லை. அடுத்து முன்னணி நடிகரான சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கலாம், தமிழிலும் தடம் பதிக்கலாம் என நினைத்திருந்த கிரித்திக்கு அந்த வாய்ப்பும் எதிர்பாராமல் பறிபோனது. இப்போது சூர்யாவின் தம்பி கார்த்தியோடு ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனடியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
நலன் குமாரசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சைலன்ட்டாக ஆரம்பமாகி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு கிர்த்தியும் நடித்து வருகிறாராம். வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'கஸ்டடி' படத்திலும் கிர்த்திதான் கதாநாயகி. அடுத்து ஜெயம் ரவி நடிக்க உள்ள 'ஜீனி' படத்திலும் நடிக்க உள்ளார் எனத் தெரிகிறது.