பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் ஜீவா, தமிழ் கலை டாட் காம் என்ற செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, கலைஞர்களுக்கு சாதி மதம் இல்லை. ஜிப்ஸி என்ற படத்தில் நடித்த போது இந்தியா முழுவதும் பயணித்தேன். அந்த சமயத்தில் அனைத்து நாட்டுபுற கலைஞர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. என்றாலும் கலைகளுக்கு மொழிகள் இல்லை என்று கூறினார் ஜீவா. மேலும் நான் நடித்த டிஷ்யூம் படத்தில் நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குகிற ஜாதி என்று ஒரு டயலாக் பேசி இருப்பேன்.
அதேபோல்தான் அனைத்து கலைஞர்களும் கைதட்டலுக்கு ஏங்குவார்கள் என்று பேசிய ஜீவா, அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கலைக்கு மொழி இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கலைக்கு மொழிகள் இல்லை. தாரை தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது நம்முடைய தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கிறாரே அதே மாதிரி தான் இதுவும். இதனை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் வளராமல் இருக்கிறோம் என்று கூறினார் நடிகர் ஜீவா.