ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் ஜீவா, தமிழ் கலை டாட் காம் என்ற செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, கலைஞர்களுக்கு சாதி மதம் இல்லை. ஜிப்ஸி என்ற படத்தில் நடித்த போது இந்தியா முழுவதும் பயணித்தேன். அந்த சமயத்தில் அனைத்து நாட்டுபுற கலைஞர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. என்றாலும் கலைகளுக்கு மொழிகள் இல்லை என்று கூறினார் ஜீவா. மேலும் நான் நடித்த டிஷ்யூம் படத்தில் நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குகிற ஜாதி என்று ஒரு டயலாக் பேசி இருப்பேன்.
அதேபோல்தான் அனைத்து கலைஞர்களும் கைதட்டலுக்கு ஏங்குவார்கள் என்று பேசிய ஜீவா, அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கலைக்கு மொழி இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கலைக்கு மொழிகள் இல்லை. தாரை தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது நம்முடைய தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கிறாரே அதே மாதிரி தான் இதுவும். இதனை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் வளராமல் இருக்கிறோம் என்று கூறினார் நடிகர் ஜீவா.