ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னணி இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க பி.வி.கே கேபிடல் என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்த அவர் கொடுத்த காசோலை வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் லிங்குசாமி மீது பி.வி.கே நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த வந்த இந்த வழக்கல் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திரபோசுக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காசோலை தொகையில் 20 சதவிகித்தை கோர்ட்டில் கட்ட தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் லிங்குசாமி மற்றும் அவரது தம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.