தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
முன்னணி இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க பி.வி.கே கேபிடல் என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்த அவர் கொடுத்த காசோலை வங்கியில் இருந்து திரும்பி வந்ததால் லிங்குசாமி மீது பி.வி.கே நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த வந்த இந்த வழக்கல் லிங்குசாமிக்கும், அவரது தம்பி சுபாஷ் சந்திரபோசுக்கும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காசோலை தொகையில் 20 சதவிகித்தை கோர்ட்டில் கட்ட தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் லிங்குசாமி மற்றும் அவரது தம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.